ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், நயன்தாரா, அரவிந்த் சுவாமி நடிப்பில் கடந்த 2015ல் வெளிவந்த படம் ‛தனி ஒருவன்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது, மேலும் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது.
இதன் அடுத்த பாகமாக ‛தனி ஒருவன் 2' பற்றிய அறிவிப்பை 2023ல் ஒரு வீடியோ உடன் அறிவித்தனர். அதன்பிறகு, படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை; படப்பிடிப்பும் துவங்கவில்லை. இது குறித்து விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற இயக்குநர் மோகன் ராஜா மற்றும் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா ஆகியோரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மோகன் ராஜா, ‛‛தனி ஒருவன் 2 மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பதற்கு அனைவருக்கும் நன்றி. எங்களுடைய பெருமைக்குரிய படம் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா சொல்லிக் கொண்டே இருப்பார். கதை எல்லாம் கேட்டுவிட்டு ரொம்ப சூப்பரா இருக்கு, சரியான நேரம் வரும்போது சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள்'' என்றார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா பேசுகையில், ‛‛மோகன் ராஜாவிடம் ‛தனி ஒருவன் 2'-ஐ தவிர்த்து 4 கதைகள் உள்ளன. ஒவ்வொன்றுமே அற்புதமாக இருக்கும். அதில் ஒரு கதையை மட்டும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குத் தான் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். 'தனி ஒருவன் 2' பெரிய முதலீட்டைக் கொண்ட படம். முதல் பாகத்தை விட மிகவும் பெரியதாக இருக்கும். அதை சரியான நேரத்தில் அறிவிக்க காத்திருக்கிறோம். ரவி மோகன், நயன்தாரா என நிறைய நடிகர்கள் இருப்பதால் அனைவருடைய தேதிகளும் ஒன்றாக அமைய வேண்டும். அது ஒரு பயங்கரமான ஸ்கிரிப்ட்'' என்றார்.




