படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் | சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு |
'விடுதலை' இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. படம் பற்றிய அறிவிப்பு 2021ல் வெளியான நிலையில், இதுவரை படப்பிடிப்பு துவங்காத நிலையில், இந்த முறை வாடிவாசல் படத்தை எடுத்த பிறகே அடுத்த படத்தை துவங்குவதில் உறுதியாக உள்ளார் வெற்றிமாறன்.
இந்த நிலையில் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில், வாடிவாசல் படத்திற்கு அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் இயக்குனர்கள் விக்னேஷ் ராஜா, மாரி செல்வராஜ் இயக்க உள்ள படங்களை தயாரிப்பதாக வேல்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதை முடித்ததும் வெற்றிமாறன் படத்தை துவங்குகின்றனர்.
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பது வழக்கம்தான். 'பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன்' ஆகிய படங்களில் இவர்கள் இணைந்து பணிபுரிந்துள்ளனர். இதில் ‛வடசென்னை 2' படம் எப்போது துவங்கும் என பல ஆண்டுகளாக ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் இவர்கள் கூட்டணி மீண்டும் இணைவது ‛வடசென்னை 2' படத்திற்கா அல்லது வேறு புதிய கதைக்கா என்பது இனிமேல் தான் தெரியவரும்.