‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மலையாள திரை உலகில் தனது 45 வருட திரையுலக பயணத்தில் தற்போதும் நம்பர் ஒன் இடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். சமீபத்தில் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான 'எம்புரான்' மற்றும் 'தொடரும்' ஆகிய படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலித்து தற்போதும் அவர் பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்துள்ளன. இந்த நிலையில் இன்று (மே 21) தனது 65வது பிறந்தநாளில் அடி எடுத்து வைக்கிறார் மோகன்லால். இதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதில் மோகன்லால் ரசிகரும் கேரளாவை சேர்ந்த பிரபல ஓவியருமான டாவின்சி சுரேஷ் என்பவர் மோகன்லாலின் பிறந்தநாள் பரிசாக அவரது உருவத்தை பலாப்பழத்தைக் கொண்டு ஓவியமாக வரைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். மோகன்லால் 65 வயதை தொடுகிறார் என்பதால் 20 வகையான பலாப்பழங்களில் இருந்து பழம், காய், விதை, தோல், இலைகள் என அதன் 65 வகையான பாகங்களை வைத்து இந்த ஓவியத்தை உருவாக்கியுள்ளார் டாவின்சி சுரேஷ்.
எட்டடி உயர அகலத்தில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய வண்ணங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. அபூர்வமாக விளையும் சிவப்பு நிற பலாப்பழத்தை பார்த்ததும் தான் இப்படி ஒரு ஓவியத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு தோன்றியதாக ஓவியர் டாவின்சி சுரேஷ் கூறியுள்ளார். திருச்சூர் பகுதியில் உள்ள வர்கீஸ் தரகன் என்பவருக்கு சொந்தமான பலா தோட்டத்தில் வைத்து இந்த ஓவியத்தை வரைந்துள்ளார் டாவின்சி சுரேஷ்.




