தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி | ஜிஎஸ்டி சோதனை பற்றி விஷ்ணு மஞ்சு விளக்கம் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கே, மதுரம் ஜோடிக்கு போட்டியாக வந்த காமெடி ஜோடி | கிரேஸ் ஆண்டனிக்காக 5 மாதங்கள் காத்திருந்த ராம் | ஆஸ்கர் விருது விழா : கமலுக்கு அழைப்பு | நான் கலெக்டர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார் : பட்டிமன்ற பேச்சாளர் ராஜா | விதார்த் நடிக்கும் ஆந்தாலாஜி கதை | ஜூலை இறுதியில் கூலி பாடல் வெளியீட்டு விழா | தலிபான்கள் ஒன்றும் இந்தப்பகுதியை ஆளவில்லையே? : கொந்தளிக்கும் சுரேஷ் கோபி பட இயக்குனர் | பன் பட்டர் ஜாமுக்காக ராஜு ஜெயமோகனை பாராட்டிய விஜய் |
ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். திரிஷா நாயகியாக நடிக்கிறார். சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி வெளியீடு என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இதே தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2, பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே., ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இதனால் ஒரே நாளில் சூர்யா, கார்த்தி படங்கள் நேரடியாக மோதுவது போன்ற சூழல் உருவானது. இந்நிலையில் திடீரென சர்தார் 2 படம் தீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்கி உள்ளது. படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அண்ணன் சூர்யாவிற்கு வழிவிட்டுள்ளார் தம்பி கார்த்தி.