பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். திரிஷா நாயகியாக நடிக்கிறார். சுவாசிகா, ஷிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி வெளியீடு என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இதே தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2, பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே., ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இதனால் ஒரே நாளில் சூர்யா, கார்த்தி படங்கள் நேரடியாக மோதுவது போன்ற சூழல் உருவானது. இந்நிலையில் திடீரென சர்தார் 2 படம் தீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்கி உள்ளது. படத்தை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் அண்ணன் சூர்யாவிற்கு வழிவிட்டுள்ளார் தம்பி கார்த்தி.