நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பல சங்கங்களில் திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கென முக்கியமான நான்கு சங்கங்கள் உள்ளன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இவற்றில் எந்த ஒரு சங்கத்திலாவது தயாரிப்பாளர் ஆகப் பதிவு செய்த பிறகு திரைப்படங்களைத் தயாரிக்கலாம்.
ஆனால், படங்களின் வெளியீடு என்று வரும் போது இந்த சங்கங்கள் அதை ஒழுங்குபடுத்தும் ஒரு நடைமுறையை இதுவரையில் செய்யாதது பல தயாரிப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.
சில வருடங்களுக்கு முன்பு படத்தின் வெளியீட்டுத் தேதியை முன்னரே சொல்லி அதற்கேற்றபடி படங்களை வெளியீடு செய்யும் ஒரு முறையை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடைபிடித்து வந்தது. கொஞ்ச நாட்கள் மட்டும் நடந்து அதன்பின் அதுவும் காணாமல் போனது.
இருக்கும் முக்கியமான தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து புதிய படங்களின் வெளியீடுகளில் ஒரு ஒழுங்கு நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகத்திலேயே நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், அதை செயல்படுத்த சம்பந்தப்பட்ட சங்கங்கள் முயற்சிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
நாளை மே 9ம் தேதி “அம்பி, எமன் கட்டளை, என் காதலே, கஜானா, கீனோ, நிழற்குடை, சவுடு, வாத்தியார் குப்பம், யாமன்,” ஆகிய 9 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும் பிப்ரவரி மாதத்திலும், மார்ச் மாதத்திலும் 9 படங்கள் ஒரே நாளில் வெளியாகின. மீண்டும் இப்போது அதுபோல வெளியாக உள்ளது. அடுத்து இப்படி ஒரு நிலை வராமல் தடுக்க திரையுலகினர் ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும் என்பதே சிறிய படத் தயாரிப்பாளர்களின் நிலையாக உள்ளது.