நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

நட்டி நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'கம்பி கட்ன கதை'. ராஜநாதன் பெரியசாமி இயக்கி உள்ளார். ஸ்ரீ ரஞ்சினி, சிங்கம்புலி, ஜாவா சுந்தரேசன் நடித்துள்ளனர்.
இதில் நட்டி போலி சாமியாராக நடித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் ராஜநாதன் கூறும்போது ''போலி சாமியார், காமெடி, ஏமாற்று வேலை இந்த மூன்று வேலையும் யாரால் செய்யமுடியும்? என்று யோசித்தபோது, உடனடியாக எங்கள் மனதுக்குள் வந்தவர் நட்டி. அவரை தவிர யாரும் இதை செய்யமுடியாது என்பதால் அவரை போராடி நடிக்க வைத்தோம்" என்றார்.
நட்டி கூறும்போது, ''சினிமாவில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராக நடிக்க வேண்டும். அப்படித்தான் செயலாற்றி வருகிறேன். போலி சாமியாராக நடிக்க எனக்கு தயக்கம் இல்லை. அதன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமே என்கிற மகிழ்ச்சிதான் உள்ளது. என்னை பொறுத்தவரை சினிமாவுக்காக எதையும் செய்யலாம். தொடர்ந்து முழு உழைப்பையும் சினிமாவுக்கு தருவேன்'', என்றார்.