வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

தமிழ் சினிமாவில் சிறப்பான ஓபனிங் வைத்துள்ள நடிகர் அஜித் குமார் என்ற பெயர் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் எப்போதுமே உண்டு. அவர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் தமிழகத்தில் நிறைய லாபத்தைக் கொடுத்த படமாக இருந்திருக்கிறது. இங்கு மட்டுமே இரண்டு வாரங்களில் 172 கோடி வசூலித்ததாக படத்தின் தமிழக வினியோகஸ்தர் ராகுல் சில தினங்களுக்கு முன்பு படத்தின் 25வது நாளில் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
இன்று ஓடிடியில் வெளியாகும் இப்படம் சில தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் இப்படத்தைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்து திரையுலகில் விசாரித்த போது, படத்தின் பட்ஜெட் காரணமாக அப்படி ஒரு சிக்கல் வந்திருக்க வாய்ப்புள்ளது என்றே தெரிவிக்கிறார்கள்.
ஓடிடி, சாட்டிலைட் உரிமை, ஆகியவை தயாரிப்பாளருக்கு நேரடி வருவாய் கணக்கில் சேர்ந்தாலும் தியேட்டர்களில் வெளியிட்ட வகையில் கிடைக்கும் பங்குத் தொகை நிறைவாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். தயாரிப்பாளருக்கு 50 கோடிக்கு மேல் நஷ்டம் வந்திருக்க வாய்ப்புள்ளது என்பதே பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்.
அதை ஈடுகட்டும் வகையில்தான் அஜித்குமார் தனது அடுத்த படத்தையும் அந்த நிறுவனத்திற்கே நடித்துத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே படத்தை இயக்குவாரா அல்லது வேறு யாராவது இயக்குவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.
அதிகாரப்பூர்வ வசூல் என்ன என்பதை படம் தியேட்டர்களில் ஓடி முடித்த பின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தால் மட்டுமே உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வரும். அதுவரையில் இது போன்ற தகவல்கள் திரையுலகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சுற்றி வரும்.




