பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். நடிப்பு தாண்டி பைக், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். சமீபகாலமாக கார் ரேஸில் உலகளவில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார். இவரின் கலைச் சேவை மற்றும் ரேஸ் திறமையை பாராட்டி மத்திய அரசு ஜனவரி மாதம் பத்ம பூஷன் விருது அறிவித்தது. டில்லியில் நேற்றுமுன்தினம் நடந்த பத்ம விருது விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் பத்ம பூஷன் விருது பெற்றார். இதில் அவரது மனைவி ஷாலினி, மகள், மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.

அனைவருக்கும் நன்றி
விருது பெற்ற பின் சென்னை திரும்பிய அஜித்திற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அஜித், ''அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். விரைவில் நேரில் சந்தித்து பேசுவோம்'' என்றார்.

மிடில் கிளாஸ் வாழ்க்கை
முன்னதாக டில்லியில் அஜித் அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது : ''பத்ம பூஷன் விருது என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் மனதளவில் இன்னும் மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்வதாக தான் உணர்கிறேன். அதனால் இந்த விருதை பெறுவது சாதாரணமான ஒரு உணர்வையே தருகிறது. விருது அறிவித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இதுமாதிரியான விருதுகள் வாங்கும் போது தான் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை உணர வைக்கிறது.
எனக்கு பட்டங்கள் மீது நம்பிக்கையில்லை. அஜித் அல்லது ஏகே என்று அழைப்பதே பிடித்திருக்கிறது. நான் ஒரு நடிகன், மற்ற வேலை போன்று இதுவும் ஒரு பணி தான். அதற்கான சம்பளத்தை பெறுகிறேன். எனக்கு என் வேலை பிடித்திருக்கிறது. முடிந்தவரை எளிமையான வாழ்க்கையை வாழ முயல்கிறேன். அதிகமாக யோசிப்பதை தவிர்க்கிறேன்.

என் சாதனைக்கு உரியவர் ஷாலினி
என் வாழ்வில் ஷாலினியின் பங்களிப்பு முக்கியமானது. வெற்றி, தோல்வி, பாராட்டு என நான் சந்திக்கும் எல்லாவற்றுக்கும் உரியவர் அவர் தான். என் முடிவுகள் சரியோ, தவறோ ஒருபோது என்னை அவர் விட்டுக் கொடுத்தது இல்லை. என்னை ஊக்குவிக்கவும் ஒருநாளும் அவர் தவறியது கிடையாது. என் சாதனைகளில் முழு பாராட்டுகளும் அவருக்குத் தான் சென்று சேர வேண்டும்.
இவ்வாறு அஜித் கூறினார்.