என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கடந்த 25 ஆண்டுகளாக விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் ராமராஜன், நடிகை நளினி ஆகியோரை அவர்களது பிள்ளைகள் சேர்த்து வைத்து விட்டதாக ஒரு செய்தியை சோசியல் மீடியாவில் பரவி வந்தது. இந்த நிலையில் அதற்கு நடிகர் ராமராஜன் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த செய்தியில், ''நானும், நளினியும் இணைந்து விட்டோம் என்ற செய்தி உண்மை இல்லை. நடக்காத ஒரு விஷயத்தை பற்றி வதந்தி பரப்பாதீர்கள். நாங்கள் பிரிந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. தனித்து வாழ்வதற்கு நான் பழகி விட்டேன். அதனால் இது போன்ற வதந்திகளால் நானும், நளினியும் மட்டுமின்றி எங்கள் பிள்ளைகளும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். என்னை பொறுத்தவரை நளினியுடனான உறவு எப்போதோ முடிந்து விட்டது. இனிமேல் நாங்கள் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. அது ஒரு நாளும் நடக்காது. எனவே தயவுசெய்து யாரும் இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார் நடிகர் ராமராஜன்.