பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

‛டிக் டாக்' மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரின் நீண்டநாள் கனவு இப்போது நிறைவேறி உள்ளது. அதாவது சொந்தமாக ஒரு வீட்டை கட்டி உள்ளார்.
வீட்டு கிரக பிரவேசம் மற்றும் குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து, ‛‛என்னுடைய சிறு வயதில் என் அப்பா அவரது அம்மா பெயரில் ஒரு வீட்டை கட்டினார். அதேப்போல் எனக்கும் எனது அம்மா பெயரில் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பது கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறி உள்ளது. உங்கள் அனைவரது ஆசீர்வாதம் மற்றும் அன்பினால் தான் இது சாத்தியமானது. இதற்காக என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கட்டியுள்ள தனது இல்லத்திற்கு ‛மொழி இல்லம்' என பெயரிட்டுள்ளார் மிருணாளினி.