விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
அயோக்யா, வேலன், இரவின் நிழல், கருடன் மற்றும் இன்று திரைக்கு வந்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை என பல படங்களில் நடித்தவர் பிரிகிடா. அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தன்னை 30 வயது நிரம்பிய நடிகை என்று பலரும் கருதுவதாக ரொம்பவே பீல் பண்ணி உள்ளார். மேலும், பவி டீச்சர் வேடத்தில் நான் நடித்த போது எனக்கு 19 வயது தான். அப்போது கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்தேன். அதையடுத்து நான் நடித்த வேடமெல்லாம் மெச்சூரிட்டியாக இருந்ததால் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு நடித்ததால் அனைவருமே எனக்கு வயது அதிகம் இருக்கு என்று நினைக்கிறார்கள். இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தில் தான் என் வயதுக்கு ஏற்ற வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். இனி இதுபோன்று இளமையான வேடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார் பிரிகிடா.