விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

அயோக்யா, வேலன், இரவின் நிழல், கருடன் மற்றும் இன்று திரைக்கு வந்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை என பல படங்களில் நடித்தவர் பிரிகிடா. அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தன்னை 30 வயது நிரம்பிய நடிகை என்று பலரும் கருதுவதாக ரொம்பவே பீல் பண்ணி உள்ளார். மேலும், பவி டீச்சர் வேடத்தில் நான் நடித்த போது எனக்கு 19 வயது தான். அப்போது கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்தேன். அதையடுத்து நான் நடித்த வேடமெல்லாம் மெச்சூரிட்டியாக இருந்ததால் அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு நடித்ததால் அனைவருமே எனக்கு வயது அதிகம் இருக்கு என்று நினைக்கிறார்கள். இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தில் தான் என் வயதுக்கு ஏற்ற வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். இனி இதுபோன்று இளமையான வேடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார் பிரிகிடா.