வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

டிக்டாக்கில் டப்மாஸ் செய்து புகழ்பெற்றவர் மிருனாளினி ரவி. அதுவே அவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்தது. கொண்டலகொண்டா கணேஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் சாம்பியன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள எனிமி, எம்.ஜி.ஆர் மகன் படங்கள் தீபாவளிக்கு வெளியானது.
தற்போது அவர் கைவசம், கோப்ரா, ஜாங்கோ படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛சினிமா பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவதால், அனைத்து மொழிப்படங்களுக்கும் தகுந்த பெண்களையே நாயகியாக நடிக்க வைக்கின்றனர். அதனால், தமிழ் பெண்களை, சினிமாவில் யாரும் புறக்கணிப்பதில்லை. தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் பாலிசி' என நடிகை மிருணாளினி ரவி கூறியுள்ளார்.




