மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டிக்டாக்கில் டப்மாஸ் செய்து புகழ்பெற்றவர் மிருனாளினி ரவி. அதுவே அவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்தது. கொண்டலகொண்டா கணேஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் சாம்பியன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள எனிமி, எம்.ஜி.ஆர் மகன் படங்கள் தீபாவளிக்கு வெளியானது.
தற்போது அவர் கைவசம், கோப்ரா, ஜாங்கோ படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛சினிமா பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவதால், அனைத்து மொழிப்படங்களுக்கும் தகுந்த பெண்களையே நாயகியாக நடிக்க வைக்கின்றனர். அதனால், தமிழ் பெண்களை, சினிமாவில் யாரும் புறக்கணிப்பதில்லை. தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் பாலிசி' என நடிகை மிருணாளினி ரவி கூறியுள்ளார்.