சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? |

ஒரு நாள் கனமழைக்கே சென்னை தத்தளிக்க ஆரம்பித்து விட்டது. சென்னை நகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்திருக்க, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. பல வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து இயக்குனரும், நடிகருமான சேரன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது: மழை பாதிப்பு வந்தால், தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும், 900 கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசிடம் முந்தைய ஆட்சியாளர்கள் வாங்கினார்களே... இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா... அந்த பைலை முதல்வர் முதலில் எடுக்கணும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.