இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, ஹிந்திபடங்கள் மற்றும் வெப்சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார் பிரியாமணி. அதோடு இளவட்ட நடிகைகளுடன் போட்டி போடும் அளவுக்கு படுகவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரியாமணியின் கணவர் முஸ்தபா ராஜூவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இடையே சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை என்றொரு சர்ச்சை எழுந்ததோடு, பிரியாமணியைவிட்டு அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஒரு பரபரப்பு செய்தி வெளியானது. அதையடுத்து, முஸ்தபா ராஜூ தன்னை விட்டு பிரியவில்லை என்று சொன்ன பிரியாமணி, கண்டிப்பாக தன்னிடம் திரும்பி வருவார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி கணவர் முஸ்தபாவுடன் இணைந்து எடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ள பிரியாமணி ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியிருக்கிறார். இதன்காரணமாக பிரியாமணி கணவரை பிரிந்து விட்டதாக வெளியான வதந்திகள் அனைத்தும் தூள் தூளாகியுள்ளது.