காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தெலுங்கு படங்களில் நடித்து வந்த
சோபிதா துலிபாலா, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு
பாகங்களிலும் வானதி என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த
ஆகஸ்டு மாதம் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சோபிதா துலிபாலா,
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அந்த
வகையில், தமிழில் பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தில் அவர் நடிக்கப்
போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த
படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அசோக் செல்வன், பஹத்
பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, சோபிதா துலிபாலா நாயகியாக
நடிக்கப் போகிறார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து
கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ
அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.