திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தெலுங்கு படங்களில் நடித்து வந்த
சோபிதா துலிபாலா, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு
பாகங்களிலும் வானதி என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த
ஆகஸ்டு மாதம் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சோபிதா துலிபாலா,
தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அந்த
வகையில், தமிழில் பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்' படத்தில் அவர் நடிக்கப்
போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தினேஷ் நாயகனாக நடிக்கும் இந்த
படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். அவர்களுடன் அசோக் செல்வன், பஹத்
பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க, சோபிதா துலிபாலா நாயகியாக
நடிக்கப் போகிறார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து
கோல்டன் ரேசியோ பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ
அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.