'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமான நாக சைதன்யா சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் முடித்தார். இந்த நிலையில் இவர்கள் நேற்று (பிப்.,8) பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவர்களுடன் நாகார்ஜுனாவின் மனைவி அமலாவும் சென்றிருந்தார். நாகார்ஜுனாவின் தந்தை நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரைப் பற்றி, டாக்டர் யர்லகட்டா லட்சுமி பிரசாத் எழுதிய ‛அக்கினேனி கா விராட் வியாக்தித்வா' என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த சந்திப்பின்போது நடிகை சோபிதா, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்போல், ஆந்திராவின் நடன பொம்மைகளான கொண்டபள்ளி நடன பொம்மைகளை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தார். இப்புகைப்படத்தை பகிர்ந்த சோபிதா, ‛‛என்னை அறிந்த எவருக்கும் கொண்டபள்ளி பொம்மைகளை (நடனமாடும் பொம்மைகள்) நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பது தெரியும். அவற்றின் நினைவுகள் தெனாலியில் உள்ள எனது தாத்தா, பாட்டி வீட்டில் எனது குழந்தை பருவத்தில் தொடங்கின. அப்படிப்பட்ட ஒன்றை பிரதமருக்கு பரிசளிக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்த கைவினைப்பொருளின் பூர்வீகம் ஆந்திரா என்பது பிரதமருக்கு தெரியும் என்பது மிகவும் மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டுள்ளார்.




