சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

தமிழ் படங்களின் கதைகள் வடநாட்டில் நடந்தாலும் அங்கும் தமிழ் பாடல்கள்தான் வைக்கப்படும். ஆனால் எல்லாமும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மகேந்திரன் தனது 'நண்டு' படத்தில் இரண்டு ஹிந்தி பாடல்களை வைத்தார். படத்தின் கதைப்படி நாயகன் லக்னோவை சேர்ந்தவர். அவரது குடும்பம் அங்கு பெரிய பணக்கார குடும்பம், ஆனால் நாயகனுக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால் அந்த குடும்பமே அவரை புறக்கணிக்கிறது. அதனால் மனம் வெறுத்து ஆறுதலுக்காக சென்னை வரும் நாயகன் இங்கு அஸ்வினியை காதலித்து திருமணம் செய்வது மாதிரியான கதை.
நாயகனின் குடும்ப சூழலை காட்டும் காட்சிகள் லக்னோவிலேயே படமாக்கப்பட்டது. 'கெய்சே கஹோன்...', 'ஹம் ஹய் அகிலே..' என தொடங்கும் இரண்டு ஹிந்தி பாடல்கள் இடம் பெற்றது. இரண்டுமே சூப்பர் ஹிட்டானது. 'அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா...' பாடல் தமிழில் ஹிட் ஆனது. இளையராஜா இசை அமைத்திருந்தார். சிவசங்கரி எழுதிய நாவல் அந்த பெயரிலேயே படமானது. ஆனால் படம் தோல்வி அடைந்தது.