வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் |

1940 வரையிலான தமிழ் படங்கள் பெரும்பாலும் இந்து புராண கதைகள், ஆன்மிக குருக்கள் ஆகியோரை மையமாக கொண்டே உருவானது. வாழ்க்கை பிரச்னைகளுக்கு ஆன்மிக குருமார்கள் தரும் பதில்கள், புராண படங்களில் கிருஷ்ண பகவான் தரும் தீர்வுகள் என்பதாக அமைந்தது.
இந்த நிலையில் பவுத்த மத பின்னணியில் உருவாகி புத்தர் பிரச்னைகளை தீர்த்த படமாக உருவானது 'அசோக்குமார்'. தியாகராஜ பாகவதரின் வெள்ளி விழா படங்களில் இதுவும் ஒன்று. அவருடன் சித்தூர் வி.நாகையா, பி.கண்ணாம்பா, டி.வி.குமுதினி, எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்தனர். ராஜா சந்திரசேகர் இயக்கி இருந்தார்.
அசோக சக்ரவர்த்தியின் மகன் குணாளன்(பாகவதர்) போர்களில் வெற்றி பெற்று திரும்பியதும் அவருக்கு திஷ்யரக்ஷி என்ற இளவரசியை மணமுடிக்க விரும்புகிறார் மன்னர் அசோகர். ஆனால் குணாளனோ காஞ்சனமாலா(குமுதினி) என்ற பெண்ணை காதலிக்கிறார். இதனால் ஆத்திரம் அடையும் திஷ்யரக்ஷி சதிவேலைகள் செய்து குணாளனையும், காஞ்சனமாலாவையும் அரண்மனையை விட்டு விரட்டுகிறார். அதோடு குணாளனின் கண்கள் பறிக்கப்படுகிறது. இதனால் குணாளனும், காஞ்சனமாலாவும் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் உண்மையை அறியும் அசோக சச்ரவர்த்தி மகனை நாடு முழுக்க தேடி அலைகிறார். கடைசியில் அவனை கண்டுபிடிக்கிறார். அப்போது புத்தர் தோன்றி குணாளனுக்கு கண்பார்வை தருவதோடு, அசோகரையும் நல்வழிப்படுத்துகிறார். இதுதான் படத்தின் கதை.
இது வரலாறு அல்ல, வடநாட்டில் சொல்லப்பட்டு வந்த நாட்டுப்புற கதை. ஏற்கெனவே மவுன படமாகவே இந்த கதை தயாராகி இருந்தது. பின்னர் ஹிந்தியிலும், தமிழிலும் பேசும் படமாக தயாரானது.
'உனை கண்டு மயங்காத பேர்களுண்டோ...' என்ற பாகவதர் பாடல் இன்றைக்கும் காற்றோடு கலந்து காதுகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. படத்தை யு டியூப்பில் இப்போதும் காணலாம்.