நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயிலர் படத்தின் வெற்றியால் இதே கூட்டணியில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் இப்படத்தில் தொடருகின்றனர்.
இவர்கள் அல்லாமல் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் புதிதாக இணைந்து நடித்து வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவராஜ் குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "ஜெயிலர் 2ம் பாகத்தில் என் கதாபாத்திரம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. இதில் என்னுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார்" என்றார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே சிவராஜ் குமார் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.