சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

எம்ஜிஆரும், கருணாநிதியும் சினிமாவில் இணைந்து பயணித்தபோது புராண படங்களிலும், பக்தி படங்களிலும் பணியாற்றாமல் இருந்தார்கள். ஆனால் எம்ஜிஆர் தனது ஆரம்ப காலத்தில் சில புராண கேரக்டர்களில் நடித்தார். கருணாநிதி வசனம் எழுத எம்ஜிஆர் நடித்த ஒரே புராண படம் 'அபிமன்யூ'.
ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் எம்ஜிஆர் அர்ச்சுணனாக நடித்தார். அதாவது அபிமன்யூவின் தந்தை. அவரது கேரக்டர் சிறியதுதான் அபிமன்யூவாக டைட்டில் கேரக்டரில் நடித்தவர் எஸ்.எம்.குமரேசன். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிதாக நடிக்கவில்லை. இந்த படத்திற்காக ஏராளமான விருதுகளை பெற்றார். இவர்கள் தவிர யு.ஆர். ஜீவரத்னம், பி.வி. நரசிம்ம பாரதி, மாலதி, எம்.ஆர். சந்தானலட்சுமி, எம்.ஜி. சக்ரபாணி, எம்.என். நம்பியார் மற்றும் எம்.எஸ்.எஸ். பாக்யம் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
கருணாநிதியும் அவரது வசன குருநாதர் ஏ.எஸ்.ஏ.சாமியும் இணைந்து படத்திற்கு வசனம் எழுதினார். அர்ச்சுணன் மகன் அபிமன்யூ இறந்து கிடக்கும்போது அர்ச்சுணன் 'என் தமிழ் மகனே' என்று அழுத காட்சி சர்ச்சை ஆனது. இந்த படத்தில் கருணாநிதி வசனம் எழுத வாங்கிய சம்பளம் 230 ரூபாய். படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தை எம். சோமசுந்தரம், ஏ. காசிலிங்கம் ஆகியோர் இயக்கி இருந்தனர்.




