ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அரசியலில் தீவிரமாக பணியாற்ற வேண்டி அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், தொடர்ந்து நடிப்பேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
“எனக்கு பணம் தேவைப்படும் வரை சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதே சமயம் எனது அரசு வேலைகள், அரசியல் வேலைகள் பாதிக்காத அளவில் அது இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
பவன் கல்யாண் தற்போது 'ஹரிஹர வீர மல்லு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து 'ஓஜி' என்ற படத்தில் அவர் இன்னும் நடித்து முடிக்க வேண்டும். 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்திற்கு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. வேறு சில படங்கள் பேச்சு வார்த்தையுடன் நிற்கிறது.
அரசியல் கட்சி நடத்த பல கோடி பணம் தேவை. அதை சினிமா மூலம் சம்பாதித்து செலவிடும் எண்ணத்தில் பவன் இருக்கிறார் எனச் சொல்கிறார்கள்.