நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அரசியலில் தீவிரமாக பணியாற்ற வேண்டி அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், தொடர்ந்து நடிப்பேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
“எனக்கு பணம் தேவைப்படும் வரை சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதே சமயம் எனது அரசு வேலைகள், அரசியல் வேலைகள் பாதிக்காத அளவில் அது இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
பவன் கல்யாண் தற்போது 'ஹரிஹர வீர மல்லு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து 'ஓஜி' என்ற படத்தில் அவர் இன்னும் நடித்து முடிக்க வேண்டும். 'உஸ்தாத் பகத் சிங்' என்ற படத்திற்கு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. வேறு சில படங்கள் பேச்சு வார்த்தையுடன் நிற்கிறது.
அரசியல் கட்சி நடத்த பல கோடி பணம் தேவை. அதை சினிமா மூலம் சம்பாதித்து செலவிடும் எண்ணத்தில் பவன் இருக்கிறார் எனச் சொல்கிறார்கள்.