35 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீசாகும் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி படம் | 'ஜனநாயகன்' விஜய் பெயர் 'தளபதி வெற்றி கொண்டான்' ? | அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம் | ரூ.100 கோடியைக் கடந்தது 'ரெட்ரோ' : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா | கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் |
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு நிகழ்வு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். 18வது ஆண்டாக இந்த வருட ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ம் தேதி நாளை ஆரம்பித்து மே மாதம் 25ம் தேதி வரை இரண்டு மாதங்கள் நடைபெற உள்ளது.
பொதுவாக ஐபிஎல் போட்டிகள் வந்தாலே தியேட்டர்களுக்கு சிக்கல் வந்துவிடும். தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் பெரும்பாலான இளைஞர்கள் ஐபிஎல் போட்டிகளை விரும்பிப் பார்ப்பவர்களாகவே இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும் இதனால் தியேட்டர்கள் நிறையவே பாதிக்கப்படுகிறது.
இந்த வருடமும் அப்படியே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் விளையாடும் மொத்த அணிகளிலும் மாற்றங்கள் நடந்துள்ளது. அதனால் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாளை முதல் தியேட்டர்களில் இரவுக் காட்சிகளுக்கான கூட்டம் குறைய வாய்ப்புள்ளது.
இந்த வாரம் குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் இல்லை. அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி 'வீர தீர சூரன் 2', ஏப்ரல் 10ம் தேதி 'குட் பேட் அக்லி, இட்லி கடை', மே 1ம் தேதி 'ரெட்ரோ' ஆகிய முக்கியமான படங்கள் வேண்டுமானால் ஐபிஎல் போட்டிகளிலிருந்து கொஞ்சம் தப்பிக்க வாய்ப்புள்ளது.
இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக பகல் நேரக் காட்சிகளுக்கும் பாதிப்புகள் வரலாம். ஏற்கெனவே சிங்கிள் தியேட்டர்கள் பலவற்றில் காட்சிகள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன. இப்போது ஐபிஎல், வெயில் தாக்கம் வந்தால் நிலைமை மோசமாக வாய்ப்புள்ளது.