இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஆன்லைன் சூதாட்ட மொபைல் ஆப்-களை விளம்பரப்படுத்தியன் காரணமாக தெலுங்கு நடிகர்களான பிரகாஷ்ராஜ், ராணா டகுபட்டி, விஜய் தேவரகொன்டா, நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி மற்றும் சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் 19 பேர் மீது தெலங்கானா காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மியாபுர் என்ற இடத்தைச் சேர்ந்த பணிந்திர சர்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள், சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் ஆன்லைன் சூதாட்ட மொபைல் ஆப்களை இணையதளங்கள் மற்ற தளங்களின் மூலம் விளம்பரப்படுத்துவதால் புகார் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனிநபருக்கும், சமூகத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுவதாக தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஐதராபாத் மற்றும் சைபராபாத் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டும் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.