கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
ஆன்லைன் சூதாட்ட மொபைல் ஆப்-களை விளம்பரப்படுத்தியன் காரணமாக தெலுங்கு நடிகர்களான பிரகாஷ்ராஜ், ராணா டகுபட்டி, விஜய் தேவரகொன்டா, நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி மற்றும் சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் 19 பேர் மீது தெலங்கானா காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மியாபுர் என்ற இடத்தைச் சேர்ந்த பணிந்திர சர்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள், சமூக வலைத்தள இன்புளூயன்சர்கள் ஆன்லைன் சூதாட்ட மொபைல் ஆப்களை இணையதளங்கள் மற்ற தளங்களின் மூலம் விளம்பரப்படுத்துவதால் புகார் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தனிநபருக்கும், சமூகத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுவதாக தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து ஐதராபாத் மற்றும் சைபராபாத் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது தெலுங்குத் திரையுலகத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ் மட்டும் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.