பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
டைரக்டர் மணிரத்னம் படத்தில் நடித்த அனுபவம் வித்தியாசமானது என்று பெருமிதத்துடன் கூறினார் ப்ரியாமணி. மணிரத்னத்தின் ராவணா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் ப்ரியாமணி. படத்தில் இவரைத்தவிர அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், வையாபுரி உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். மணரத்னம் பட அனுபவம் குறித்து அவரிடம் கேட்டபோது, அது ஒரு வித்தியாசமான அனுபவம். மணிரத்னம் ரியாலிசத்தை விரும்புகிறவர். டயலாக் மற்றும் நடிப்பு இயல்பாக வர வேண்டும் என்று மெனக்கெடுவார். படத்தின் சதாசிவ பிரபு எனது தந்தையாக நடித்தார். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன், என்றார். தமிழில் நல்ல கதையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கப்போவதாக கூறும் ப்ரியாமணி, டைரக்டர் அமீரின் யோகி படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஏனென்றால் மற்றவர்கள் நடிக்கும் படத்திற்கே ரொம்ப மெனக்கெடும் அமீர், தனது படத்திற்கு எப்படி மெனக்கெட்டிருப்பார் என்பதை சொல்லவா வேண்டும்? என்கிறார். அமீரின் பருத்திவீரன் படம்தான் ப்ரியாமணிக்கு முகவரி தேடிக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.