எம்புரான், பஷூக்கா : தொடர்ந்து ஆக்ஷன் மோடுக்கு தயாராகும் மலையாளம் | இன்ஸ்டா பிரபலத்தை பிரபாஸின் ஜோடியாக்கியது ஏன்? : இயக்குனர் விளக்கம் | மீண்டும் ஒரு புரமோஷன் சர்ச்சை : இந்த முறை பெண் இயக்குனருக்கும் நடிகைக்கும் | பாவனா நடித்துள்ள ‛தி டோர்' படத்தின் டீசர் வெளியானது | அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்தில் சர்வதேச நடிகைகளா? | 'விடாமுயற்சி' வசூலைக் கடந்த 'டிராகன்' | 7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர் | தனுஷ் இல்லாமல் 'வட சென்னை 2': வெற்றிமாறன் முடிவு | 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும் : மாளவிகா மோகனன் | நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் |
பான் மசாலா விளம்பர படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் ஆகியோர் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த வக்கீல் யோகேந்திர சிங் பதியால் என்பவர் நுகர்வோர் குறை தீர்ப்பு கமிஷனில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ''நடிகர்கள் ஷாருக்கான், அஜய்தேவ்கான், டைகர் ஷெராப் ஆகியோர் நடித்துள்ள பான் மசாலா விளம்பர படங்களில், பான் மசாலாவில் குங்குமப்பூ கலப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. சந்தையில் ஒரு கிலோ குங்குமப்பூ ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் பான் மசாலா விலை வெறும் 5 ரூபாய் மட்டும்தான். அப்படி இருக்கும்போது பான் மசாலாவில் எப்படி குங்குமப்பூவை கலப்பார்கள்.
நடிகர்களின் பான் மசாலா விளம்பரத்தை உண்மை என்று நம்பி சாதாரண மக்கள் பான் மசாலாவை உட்கொள்கிறார்கள். இது ஆரோக்கியத்துக்கு கேடு செய்கிறது. புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளையும் உருவாக்குகிறது. எனவே பான் மசாலா விளம்பரங்களில் நடித்துள்ள நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் ஆகிய மூவரும் வருகிற 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நுகர்வோர் கமிஷன் தலைவர் கைர்சிலாஸ் மீனா, உறுப்பினர் ஹேமலதா அகர்வால் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.