தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஹிந்தி படங்களில் நடித்து வந்தபோது மும்பையில் குடியிருந்த பிரியங்கா சோப்ரா, 2018ல் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்ட பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார். என்றாலும் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தார். பின்னர் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், ராஜமவுலி கால்ஷீட் கேட்கும் போதெல்லாம் கொடுத்து நடிக்க போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் தற்போது மும்பையில் உள்ள தன்னுடைய 13 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்த செய்திகள் பாலிவுட்டில் வெளியாகியுள்ளது.




