கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
பான் மசாலா விளம்பர படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் ஆகியோர் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த வக்கீல் யோகேந்திர சிங் பதியால் என்பவர் நுகர்வோர் குறை தீர்ப்பு கமிஷனில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ''நடிகர்கள் ஷாருக்கான், அஜய்தேவ்கான், டைகர் ஷெராப் ஆகியோர் நடித்துள்ள பான் மசாலா விளம்பர படங்களில், பான் மசாலாவில் குங்குமப்பூ கலப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. சந்தையில் ஒரு கிலோ குங்குமப்பூ ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் பான் மசாலா விலை வெறும் 5 ரூபாய் மட்டும்தான். அப்படி இருக்கும்போது பான் மசாலாவில் எப்படி குங்குமப்பூவை கலப்பார்கள்.
நடிகர்களின் பான் மசாலா விளம்பரத்தை உண்மை என்று நம்பி சாதாரண மக்கள் பான் மசாலாவை உட்கொள்கிறார்கள். இது ஆரோக்கியத்துக்கு கேடு செய்கிறது. புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளையும் உருவாக்குகிறது. எனவே பான் மசாலா விளம்பரங்களில் நடித்துள்ள நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் ஆகிய மூவரும் வருகிற 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நுகர்வோர் கமிஷன் தலைவர் கைர்சிலாஸ் மீனா, உறுப்பினர் ஹேமலதா அகர்வால் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.