கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
பான் மசாலா விளம்பர படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் ஆகியோர் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த வக்கீல் யோகேந்திர சிங் பதியால் என்பவர் நுகர்வோர் குறை தீர்ப்பு கமிஷனில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ''நடிகர்கள் ஷாருக்கான், அஜய்தேவ்கான், டைகர் ஷெராப் ஆகியோர் நடித்துள்ள பான் மசாலா விளம்பர படங்களில், பான் மசாலாவில் குங்குமப்பூ கலப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. சந்தையில் ஒரு கிலோ குங்குமப்பூ ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் பான் மசாலா விலை வெறும் 5 ரூபாய் மட்டும்தான். அப்படி இருக்கும்போது பான் மசாலாவில் எப்படி குங்குமப்பூவை கலப்பார்கள்.
நடிகர்களின் பான் மசாலா விளம்பரத்தை உண்மை என்று நம்பி சாதாரண மக்கள் பான் மசாலாவை உட்கொள்கிறார்கள். இது ஆரோக்கியத்துக்கு கேடு செய்கிறது. புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளையும் உருவாக்குகிறது. எனவே பான் மசாலா விளம்பரங்களில் நடித்துள்ள நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் ஆகிய மூவரும் வருகிற 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நுகர்வோர் கமிஷன் தலைவர் கைர்சிலாஸ் மீனா, உறுப்பினர் ஹேமலதா அகர்வால் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.