கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் இயக்குனர் சாச்சி டைரக்ஷனில் அய்யப்பனும் கோஷியும் என்கிற படம் வெளியானது. பிரித்விராஜ் பிஜூமேனன் இருவரும் கதாநாயகர்களாக நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒய்வு பெறப்போகும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ஓய்வு பெற்ற ஒரு இளம் ராணுவ அதிகாரிக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தமாக இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜி ஆர் இந்துகோபன் எழுதிய விலாயத் புத்தா என்கிற நாவலை சினிமாவுக்காக மாற்றும் வேலைகளில் ஈடுபட்டிருந்த போதுதான் இயக்குனர் சாச்சி எதிர்பாராத விதமாக மரணத்தை தழுவினர்.
ஆனாலும் அவரது கனவு படமான இதை எடுத்தே தீருவது என முடிவு செய்த பிரித்விராஜ், சாச்சியின் உதவியாளரும் தன்னுடன் லூசிபர் படத்தில் பணியாற்றியவருமான ஜெயன் நம்பியாரின் டைரக்சனில் இந்த படத்தில் நடிக்க தொடங்கினார். இடையில் படப்பிடிப்பின் போது பிரித்விராஜுக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் சில மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள், லூசிபர் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தை உருவாக்கும் பணியில் என பிஸியாகிவிட்டார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் சமீபத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை இது நிறைவு செய்துள்ளார் பிரித்விராஜ். இரண்டரை வருடத்திற்கு மேலான கடுமையான உழைப்பு வெற்றிகரமாக நினைவுக்கு வந்துள்ளது என்று கூறியவர் பிரித்விராஜ் இந்த படத்தை டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.