பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'மார்கோ'. 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது ஓடிடியில் வெளியாகி அதிலும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெற்றி பெற்றாலும் படத்தில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. இந்த நிலையில் கேரள சட்டசபையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன் கொலை செய்பவர்களை ஹீரோக்களாக சித்தரிப்பதா என்று 'மார்கோ' படத்தை தாக்கி பேசி உள்ளார்.
கோழிக்கோட்டில் பத்தாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் சென்னித்தலா ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது...
"சமீபகாலமாக வெளியாகும் பல சினிமாக்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக உள்ளன. ரவுடிகளை படங்களில் மகான்கள் போல காட்டுகின்றனர். படங்களில் அதிக கொலைகள் செய்பவர் ஹீரோவாக அங்கீகரிக்கப்படுகிறார். அதைப்பார்த்து மாணவர்களும் ரவுடிகளாக மாறுகின்றனர். சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய (மார்கோ) ஒரு படத்தை பார்த்து சில பள்ளி மாணவர்கள் ரவுடி கோஷ்டியில் சேர்ந்ததாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது" என்றார்.