இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராகவும் கடந்து சில வருடங்களாக குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகர் பாபு ஆண்டனி. தமிழில் 'பூவிழி வாசலிலே, சூரியன்' உள்ளிட்ட படங்களில் கொடூரமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர்.
தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் 'ஓடும் குதிர சாடும் குதிர' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாபு ஆண்டனி. பிரேமலு படத்தில் கவனம் ஈர்த்த நடிகர் அல்தாப் உசேன் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார் பாபு ஆண்டனி.
இவர் பஹத் பாசிலின் தந்தை பாசில் இயக்கத்தில் தமிழில் பூவிழி வாசலிலே', மலையாளத்தில் உருவான 'பூவின் புதிய பூந்தென்னல்' உள்ளிட்ட படங்களில் நடித்த போது அந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த பஹத் பாசில் இவரது மடியில் ஏறி அமர்ந்து விளையாடும் சிறுவனாக இருந்தார். அப்படிப்பட்டவர் இன்று பான் இந்திய நடிகராக மாறி இருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். தற்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்திலேயே அவருடன் இணைந்து நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாபு ஆண்டனி.