ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எண்பது, தொண்ணூறுகளில் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் தான் பாபு ஆண்டனி. ஆனால் கடந்த சில வருடங்களாக விண்ணைத்தாண்டி வருவாயா, காக்கா முட்டை, காயங்குளம் கொச்சுண்ணி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் புதிய முகம் காட்டி வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம் மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தை இயக்கிய ஓமர் லுலு இவரை கதாநாயகனாக வைத்து பவர்ஸ்டார் என்கிற படத்தை இயக்க உள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க 1995ல் பாபு ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளியான படம் சந்தா. இந்தப்படம் வெளியான சமயத்தில் பல படங்களில் அவர் வில்லனாக நடித்து வந்தாலும், சந்தா படத்தில் அவர் நடித்த சுல்தான் என்கிற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக அந்தப்படத்தில் பாபு ஆண்டனி அணிந்திருந்த உடை, பேசிய வசனங்கள், அவர் காட்டிய ஸ்டைல் எல்லாமே இளைஞர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பாபு ஆண்டனி. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சுனில் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார். இந்த கதை குறித்து தற்போது இயக்குனருடன் விவாதித்து வருகிறார் பாபு ஆண்டனி.