ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
எண்பது, தொண்ணூறுகளில் தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் தான் பாபு ஆண்டனி. ஆனால் கடந்த சில வருடங்களாக விண்ணைத்தாண்டி வருவாயா, காக்கா முட்டை, காயங்குளம் கொச்சுண்ணி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் புதிய முகம் காட்டி வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம் மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தை இயக்கிய ஓமர் லுலு இவரை கதாநாயகனாக வைத்து பவர்ஸ்டார் என்கிற படத்தை இயக்க உள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க 1995ல் பாபு ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளியான படம் சந்தா. இந்தப்படம் வெளியான சமயத்தில் பல படங்களில் அவர் வில்லனாக நடித்து வந்தாலும், சந்தா படத்தில் அவர் நடித்த சுல்தான் என்கிற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக அந்தப்படத்தில் பாபு ஆண்டனி அணிந்திருந்த உடை, பேசிய வசனங்கள், அவர் காட்டிய ஸ்டைல் எல்லாமே இளைஞர்களைக் கவர்ந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் பாபு ஆண்டனி. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சுனில் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார். இந்த கதை குறித்து தற்போது இயக்குனருடன் விவாதித்து வருகிறார் பாபு ஆண்டனி.