பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட வெளிமாநில படங்கள் தமிழில் வெளியாவதும், வெற்றி பெறுவதும் வழக்கமான ஒன்று. அதேப்போல தமிழ் படங்கள் வெளி மாநிலங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றதும் உண்டு. தமிழ் படங்கள் அதிகபட்சம் வெளிமாநிலங்களில் 100 நாள் வரை ஓடி ஓடியிருக்கிறது. ஆனால் வெளி மாநிலத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே படம் முந்தானை முடிச்சி.
முந்தானை முடிச்சு 1983ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. தமிழ் நாட்டில் 55 தியேட்டர்களில் வெளியானது. இதில் 43 தியேட்டர்களில் 100 நாள் ஓடியது, 12 தியேட்டர்களில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. சென்னை மற்றும் மதுரை தியேட்டர்களில் வெள்ளி விழாவை தாண்டியும் ஓடியது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தியேட்டரில் 100 நாட்களும், திருவனந்தபுரத்தில் வெளியான தியேட்டரில் வெள்ளி விழாவும் கொண்டாடியது. படத்தின் வெள்ளிவிழாவில் அப்போதைய முதல் எம்ஜிஆர் கலந்து கொண்டு படகுழுவினர்களுக்கு கேடயம் வழங்கி வாழ்த்தி பேசினார்.