எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சினிமா தொடங்கிய காலத்தில் ராமாயணம், மகாபாரத கதைகளும், அதன் கிளைகதைகளும் படமாகி வந்த நேரத்தில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம் 'பக்த துளிதாஸ்'. 1937ல் வந்த படத்தை ராஜசந்திரசேகர் இயக்கினார். எம்.கே.ராதா துளசிதாசாக நடித்தார், கே.எஸ்.சபிதா தேவி அவரது மனைவியாக நடித்தார்.
புராண காலத்தில் வட மொழியில் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, அக்பரின் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையில் மத ஆலோசகராக இருந்த ஆத்மாராவுக்கு மகனாக பிறந்து, ஹிந்தியில் ராமாயணத்தை இயற்றியதாக இந்த படத்தின் கதை அமைந்திருந்தது.
1947ம் ஆண்டு வெளிவந்த 'பக்த துளிதாஸ்' படத்தை பி.எஸ்.ரங்கா இயக்கினார். பி.எஸ்.ராஜ அய்யங்கர் துளசிராமாக நடித்தார். அவர் மனைவியாக லட்சுமி சங்கர் நடித்தார். இந்த படத்தில் வால்மீகி அத்தினாபுரத்தில் வாழ்ந்த ராம பக்தரான ஆத்மாராவிற்கு மகனாக பிறந்து தமிழில் ராமாயணத்தை எழுதியதாக அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றது.