இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என பெயர் எடுத்து வாழ்ந்து, மறைந்தவர் சிவாஜி கணேசன். இவரது மகன்களான ராம்குமார் (நடிகர், தயாரிப்பாளர்), பிரபு(நடிகர்), இவர்களின் வாரிசுகளான துஷ்யந்த் (நடிகர், தயாரிப்பாளர்), விக்ரம் பிரபு(நடிகர்) ஆகியோரும் சினிமாவில் பயணித்து வருகின்றனர்.
ராம் குமாரின் மகனான துஷ்யந்த், ‛ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3.74 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதில் மத்தியஸ்தராக நீதிபதி ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். அசல் மற்றும் வட்டி உடன் சேர்ந்து ரூ.9.39 கோடியை திருப்பி செலுத்த துஷ்யந்த்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்கவும் துஷ்யந்திற்கு காலஅவகாசம் வழங்கியிருந்தது. ஆனால் துஷ்யந்த் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய சென்னை, நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.