தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
இந்தியாவின் முன்னணி திரைப்பட பாடகி ஸ்ரேயா கோஷல். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனியாக இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். ஸ்ரேயா சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இயங்கி கொண்டிருக்கிறார். அவரது எக்ஸ் தளத்தில் 69 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் அவரது எக்கஸ் தளம் முடக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் உள்ளே புகுந்து முடக்கி உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், 'எனது எக்ஸ் தளம் கடந்த 13ம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளது. இதைச் சரிப்படுத்த எக்ஸ் தள குழுவினரை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால், தானியங்கி முறையில் வரும் பதில்களைத் தவிர எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனது கணக்கை நீக்கவும் முடியவில்லை, உள்ளே நுழையவும் முடியவில்லை.
எனவே, தயவுசெய்து எனது 'எக்ஸ்' பக்கத்தில் இருந்து வரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம், எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம், அனைத்தும் போலி மற்றும் மோசடி செய்திகளாக இருக்கும். எனது தளம் மீட்கப்பட்ட பிறகு தகவல் சொல்கிறேன்' என்று கூறியுள்ளார்.