ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்க வில்லன் நடிகராகவும் கடந்து சில வருடங்களாக குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வருபவர் நடிகர் பாபு ஆண்டனி. தமிழில் 'பூவிழி வாசலிலே, சூரியன்' உள்ளிட்ட படங்களில் கொடூரமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியவர்.
தற்போது மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் 'ஓடும் குதிர சாடும் குதிர' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாபு ஆண்டனி. பிரேமலு படத்தில் கவனம் ஈர்த்த நடிகர் அல்தாப் உசேன் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார் பாபு ஆண்டனி.
இவர் பஹத் பாசிலின் தந்தை பாசில் இயக்கத்தில் தமிழில் பூவிழி வாசலிலே', மலையாளத்தில் உருவான 'பூவின் புதிய பூந்தென்னல்' உள்ளிட்ட படங்களில் நடித்த போது அந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த பஹத் பாசில் இவரது மடியில் ஏறி அமர்ந்து விளையாடும் சிறுவனாக இருந்தார். அப்படிப்பட்டவர் இன்று பான் இந்திய நடிகராக மாறி இருப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். தற்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்திலேயே அவருடன் இணைந்து நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாபு ஆண்டனி.