ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
மலையாள சினிமாவில் கடந்த 2016ம் வருடம் வெளியான 'புலி முருகன்' திரைப்படம் மிகப்பெரிய கமர்சியல் வெற்றியை பெற்றதுடன் மலையாளத்தில் முதன்முறையாக 100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்கிற பெயரையும் பெற்றது. மலையாள சினிமாவின் வியாபார எல்லையையும் விஸ்தரித்தது. மோகன்லால் அதுவரை தான் ஏற்று நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்தார். படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்தது.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற டிஜிபி ஆன டோமின் தங்கச்சேரி என்பவர் புலி முருகன் படத்திற்காக வங்கியில் வாங்கிய 2 கோடி ரூபாய் கடன் பாக்கியை கூட இன்னும் அடைக்காமல் இருக்கிறார்கள் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இப்படி திடீரென அவர் புலி முருகன் படத்தை பற்றியும் அதன் வங்கிக் கடனை பற்றியும் கூறுவதற்கு காரணம் அந்த படம் வெளியான சமயத்தில் அவர் கேரள பொருளாதார கழகத்தின் மேனேஜிங் டைரக்டராக பொறுப்பில் இருந்தார். அந்த சமயத்தில் தான் புலி முருகன் படத்திற்காக கடன் வாங்கப்பட்டது. ஆனால் அவர் கூறியுள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விஷயம் என படத்தின் தயாரிப்பாளர் தோமிச்சன் முலகுப்பாடம் தனது சோசியல் மீடியா பக்கத்தின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “புலி முருகன் படம் திட்டமிட்ட நாட்களை விட அதிக நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதேபோல அதற்காக ஒதுக்கிய பட்ஜெட்டை விட அதிக செலவும் எடுத்தது. அந்த சமயத்தில் வங்கியில் கடன் வாங்கியது உண்மைதான். ஆனால் படம் வெளியான பிறகு கிட்டத்தட்ட மூன்று வாரங்களிலேயே 100 கோடி வசூலை தொட்டது. படத்திற்காக போட்ட முதலீட்டை விட பல மடங்கு லாபம் கொடுத்தது. இந்த படத்திற்காக வரியாகவே நான் மூன்று கோடி ரூபாய் கட்டி உள்ளேன். அப்படி இருக்கையில் அந்த இரண்டு கோடி ரூபாய் வங்கி கடனை கட்டவில்லை என்று சிலர் கூறி இருப்பது உண்மைக்கு மாறான விஷயம். எதற்காக அவர் இப்படி கூறியுள்ளார் என்று தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.