'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த ஆண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசன் அவரது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ. 325 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் நேற்று அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் கூறுகையில், "அமரன் படம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே எனக்கு சம்பளம் முழுவதையும் கொடுத்து, சரியான மரியாதையும் தந்தது ராஜ்கமல் நிறுவனம். அதற்கு ரொம்ப நன்றி கமல் சார். இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், நான் சரியான நேரத்தில் சம்பளம் வாங்கியது மிகவும் குறைவான படங்களில் தான். சில நேரங்களில் படம் வெளியாகும் போது கொடுத்த சம்பளத்திலிருந்து பாதியை வாங்கிக் கொண்டும் சென்றுள்ளார்கள்" என தெரிவித்துள்ளார்.