நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
கடந்த ஆண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசன் அவரது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ. 325 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் நேற்று அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் கூறுகையில், "அமரன் படம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே எனக்கு சம்பளம் முழுவதையும் கொடுத்து, சரியான மரியாதையும் தந்தது ராஜ்கமல் நிறுவனம். அதற்கு ரொம்ப நன்றி கமல் சார். இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், நான் சரியான நேரத்தில் சம்பளம் வாங்கியது மிகவும் குறைவான படங்களில் தான். சில நேரங்களில் படம் வெளியாகும் போது கொடுத்த சம்பளத்திலிருந்து பாதியை வாங்கிக் கொண்டும் சென்றுள்ளார்கள்" என தெரிவித்துள்ளார்.