சோனி விழா : வருகிறது புதிய சேனல் | கடும் எதிர்ப்பால் மனோஜ் பாஜ்பாய் படத் தலைப்பு மாற்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு | பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் |

கடந்த ஆண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசன் அவரது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ. 325 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் நேற்று அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் கூறுகையில், "அமரன் படம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே எனக்கு சம்பளம் முழுவதையும் கொடுத்து, சரியான மரியாதையும் தந்தது ராஜ்கமல் நிறுவனம். அதற்கு ரொம்ப நன்றி கமல் சார். இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், நான் சரியான நேரத்தில் சம்பளம் வாங்கியது மிகவும் குறைவான படங்களில் தான். சில நேரங்களில் படம் வெளியாகும் போது கொடுத்த சம்பளத்திலிருந்து பாதியை வாங்கிக் கொண்டும் சென்றுள்ளார்கள்" என தெரிவித்துள்ளார்.