ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மோகன் பாபு. அவருக்கும் அவரது இளைய மகனான நடிகர் மஞ்சு மனோஜுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் மோகன் பாபு வீட்டில் நடைபெற்ற தகராறை அடுத்து பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தனர்.
அப்போது கேள்வி கேட்ட டிவி நிருபரைத் தாக்கினார் மோகன் பாபு. இதில் காயமடைந்த டிவி நிருபர் அளித்த புகாரை அடுத்து மோகன் பாபு மீது வழக்கு தொடுக்கப்பட்டது. காயமடைந்த நிருபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த வழக்கில் கைதாகி விடலாம் என்ற அச்சத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடுத்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார் மோகன் பாபு. அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.