'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'தங்கலான்' படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன், அதை அடுத்து கார்த்தி நடிக்கும் 'சர்தார்-2' படத்தில் நடித்தவர், தற்போது தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'ராஜா சாப்' என்ற படத்திலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் 'ஹிருதயபூர்வம்' படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே 'தங்கலான்' திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக அறிவித்தனர். இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற மாளவிகா மோகனன், ''பார்வையாளர்கள் எப்போதும் என்னைப் பார்க்கும் விதத்தில் இருந்து மாற்றி பார்க்க விரும்பினேன். வழக்கமான எனது நாயகி பிம்பத்தை உடைக்க காத்திருந்த சமயத்தில் 'தங்கலான்' வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கதாபாத்திரத்துக்காக நான் உயிரை கொடுத்தேனா இல்லையா என்பதைவிட அதற்காக அதிக மெனக்கெட்டேன்.
அதில் வரும் முடிக்கூட என்னுடையது இல்லை. மேக்கப் வித்தியாசமாக இருந்தது. இந்தக் காரணங்களால் எனக்கு தங்கலான் படத்தில் நடிக்க சுவாரசியமாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது. ஆனால், அதில்தான் நான் எதிர்பார்த்ததை செய்யும் வாய்ப்பு இருப்பதை கவனித்தேன். அதனால் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன்'' எனப் பேசினார்.