ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது காலில் அடிபட்டு சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. என்றாலும் தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சக்கர நாற்காலியில் சென்று வருகிறார். இதற்காகவே தற்போது அவர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் தனது வீட்டில் டி-ஷர்ட் அணிந்து தான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. அந்த டி-ஷர்டில் கனிவுடன் என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது.
அதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இன்றைய நாட்களில் கருணை என்பது மிகவும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. நான் கருணை மற்றும் அதனுடன் வரும் அனைத்தையும் சேர்த்து தேர்வு செய்கிறேன். நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் அன்பாக இருப்போம்'' என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒரு காரில் ஏறுவது போன்ற வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. அதில் விஜய் தேவரகொண்டா விறுவிறு என காரில் ஏறுகிறார்.. அவர் கூடவே நொண்டியபடி வரும் ராஷ்மிகாவுக்கு காரில் ஏறுவதற்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை. இதையடுத்து பலரும் விஜய் தேவரகொண்டாவை வலைதளங்களில் விமர்சித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக ராஷ்மிகாவின் இந்த பதிவு இருக்கும் என தெரிகிறது.
மராட்டிய மன்னர் சாம்பாஜியின் வாழ்க்கையை தழுவி ‛சாவா' என்ற ஹிந்தி படம் உருவாகி உள்ளது. இதில் மகாராணி ஏசுபாய் வேடத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படம் பிப்., 14ல் காதலர் தினத்தில் திரைக்கு வருகிறது. இது தவிர, சிக்கந்தர், குபேரா, தி கேர்ள் பிரண்ட் போன்ற படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருகிறார்.