ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

தென்னிந்திய சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வருவது கேரள சினிமாவில் தான். தற்போது அங்கு வெளியாகும் படங்களும் 100 கோடி, 200 கோடி வசூலை நெருங்கிவிட்டன. இந்நிலையில் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஜூன் 1 முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் சுரேஷ் குமார் கூறுகையில், ‛‛பொழுதுபோக்கு வரி, சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் தயாரிப்பாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதை குறைக்க சொல்லி அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜுன் 1 முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த பணியும் நடக்காது என முடிவு செய்துள்ளோம். மேலும் நடிகர்களின் அதிக சம்பளமும் தயாரிப்பாளர்களை பாதிக்கிறது. படத்தின் பட்ஜெட்டில் 60 சதவீதம் நடிகர்களுக்கு செல்கிறது. ஜனவரியில் மட்டும் கேரள சினிமாவிற்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.