மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தென்னிந்திய சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வருவது கேரள சினிமாவில் தான். தற்போது அங்கு வெளியாகும் படங்களும் 100 கோடி, 200 கோடி வசூலை நெருங்கிவிட்டன. இந்நிலையில் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஜூன் 1 முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் சுரேஷ் குமார் கூறுகையில், ‛‛பொழுதுபோக்கு வரி, சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் தயாரிப்பாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதை குறைக்க சொல்லி அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜுன் 1 முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த பணியும் நடக்காது என முடிவு செய்துள்ளோம். மேலும் நடிகர்களின் அதிக சம்பளமும் தயாரிப்பாளர்களை பாதிக்கிறது. படத்தின் பட்ஜெட்டில் 60 சதவீதம் நடிகர்களுக்கு செல்கிறது. ஜனவரியில் மட்டும் கேரள சினிமாவிற்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.