மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தென்னிந்திய சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வருவது கேரள சினிமாவில் தான். தற்போது அங்கு வெளியாகும் படங்களும் 100 கோடி, 200 கோடி வசூலை நெருங்கிவிட்டன. இந்நிலையில் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஜூன் 1 முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் சுரேஷ் குமார் கூறுகையில், ‛‛பொழுதுபோக்கு வரி, சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் தயாரிப்பாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதை குறைக்க சொல்லி அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜுன் 1 முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த பணியும் நடக்காது என முடிவு செய்துள்ளோம். மேலும் நடிகர்களின் அதிக சம்பளமும் தயாரிப்பாளர்களை பாதிக்கிறது. படத்தின் பட்ஜெட்டில் 60 சதவீதம் நடிகர்களுக்கு செல்கிறது. ஜனவரியில் மட்டும் கேரள சினிமாவிற்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.