'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தென்னிந்திய சினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வருவது கேரள சினிமாவில் தான். தற்போது அங்கு வெளியாகும் படங்களும் 100 கோடி, 200 கோடி வசூலை நெருங்கிவிட்டன. இந்நிலையில் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஜூன் 1 முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் சுரேஷ் குமார் கூறுகையில், ‛‛பொழுதுபோக்கு வரி, சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் தயாரிப்பாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதை குறைக்க சொல்லி அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளோம். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜுன் 1 முதல் படப்பிடிப்பு உள்ளிட்ட எந்த பணியும் நடக்காது என முடிவு செய்துள்ளோம். மேலும் நடிகர்களின் அதிக சம்பளமும் தயாரிப்பாளர்களை பாதிக்கிறது. படத்தின் பட்ஜெட்டில் 60 சதவீதம் நடிகர்களுக்கு செல்கிறது. ஜனவரியில் மட்டும் கேரள சினிமாவிற்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.