பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக விவாகரத்து செய்து கொண்டார். தெலுங்கு நடிகை சோபிதாவை கடந்த ஆண்டில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. அதையடுத்து சமந்தா எப்போது இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இயக்குனர் ஒருவரை அவர் காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நாகசைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, என்னுடைய வாழ்க்கையில் பல விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். அதேபோன்று தான் திருமண பந்தத்தில் இருந்தும் கடந்து வந்துள்ளேன். அதோடு சில விஷயங்களில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன், இதனால் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். மற்றபடி நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்து அவர் மீது எந்தவித பொறாமையோ, வெறுப்போ எனக்கு ஏற்படவில்லை.
அதோடு இந்த சமூகத்தில் பெண்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் வாழ்க்கையில் முழுமை பெற்று விட்டதாகவும் கருதுகிறார்கள். ஆனால் நான் அதை அப்படி பார்க்கவில்லை. தனிமையிலும் மகிழ்ச்சி உள்ளது. பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலும் தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் வாழ முடியும் என்பதே எனது கருத்தாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.