எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தமிழில் ரங்கூன், அமரன் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் அமரன் படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில் மணிரத்னத்துடன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பிய முதல் திரைத்துறை சார்ந்த நபர் நீங்கள் தான். அது 2005ல் நடக்கவும் செய்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதனை நான் தொலைத்துவிட்டேன். அதனை நினைத்து மன வேதனை அடைந்தேன். இரண்டு தசாப்தங்கள் கழித்து, இரண்டு படங்களை இயக்கிய பின்னர் இப்போது உங்களுடன் அருகில் நின்று புகைப்படத்தை எடுப்பதற்கு தைரியம் வந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.