ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தமிழில் ரங்கூன், அமரன் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் அமரன் படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில் மணிரத்னத்துடன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பிய முதல் திரைத்துறை சார்ந்த நபர் நீங்கள் தான். அது 2005ல் நடக்கவும் செய்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதனை நான் தொலைத்துவிட்டேன். அதனை நினைத்து மன வேதனை அடைந்தேன். இரண்டு தசாப்தங்கள் கழித்து, இரண்டு படங்களை இயக்கிய பின்னர் இப்போது உங்களுடன் அருகில் நின்று புகைப்படத்தை எடுப்பதற்கு தைரியம் வந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.




