'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தமிழில் ரங்கூன், அமரன் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் அமரன் படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர், டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்த நிலையில் ராஜ்குமார் பெரியசாமி அவரது சமூக வலைதள பக்கத்தில் மணிரத்னத்துடன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார்.
அதன்படி, "நான் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பிய முதல் திரைத்துறை சார்ந்த நபர் நீங்கள் தான். அது 2005ல் நடக்கவும் செய்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதனை நான் தொலைத்துவிட்டேன். அதனை நினைத்து மன வேதனை அடைந்தேன். இரண்டு தசாப்தங்கள் கழித்து, இரண்டு படங்களை இயக்கிய பின்னர் இப்போது உங்களுடன் அருகில் நின்று புகைப்படத்தை எடுப்பதற்கு தைரியம் வந்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.