எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

மதுவின் தீமையை விளக்கி சமீபத்தில் 'பாட்டல் ராதா' என்ற படம் வெளிவந்தது. அதற்கு முன்பு 'அப்பா வேணாம்பா', 'கிளாஸ்மெட்', 'மதுபானகடை' உள்ளிட்ட பல படங்கள் வெளிவந்தன. ஆனால் மதுவின் தீமையை விளக்கி முழுநீள படமாக வெளிவந்த முதல் படம் 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்'. இந்த படத்தை கடலூர் புருஷோத்தமன் இயக்கினார். தேங்காய் சீனிவாசன் நாயகனாகவும், கே.ஆர்.விஜயா நயாகியாகவும் நடித்தார்கள். ராஜவர்த்தினி பிக்சர்ஸ் தயாரித்தது.
இந்த படத்தை அன்றைய முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய எம்ஜிஆர். “மது அரக்கனை ஒழிக்க இதுபோன்ற திரைப்படங்கள் அவசியம். இந்த நல்ல முயற்சிக்காகவே இந்த படத்தை நான் தொடங்கி வைக்கிறேன். இந்த படம் மாநில விருதை மட்டுல்ல மத்திய அரசின் விருதையும் பெற வேண்டும்” என்றார்.
படம் வெளியாகி சுமாரன வரவேற்பைத்தான் பெற்றது. சிறந்த திரைப்படத்திற்கான மாநில அரசு விருதை பெற்றது.




