நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா | ஆக்ஷன் மோடில் தோனி மற்றும் மாதவன் ; விளம்பரத்திற்காகவா ? | 2ம் பாகத்திற்கு கதை எழுதுகிறேன் : தொடரும் பட இயக்குனர் வைத்த சஸ்பென்ஸ் | இரண்டு படங்கள் தொடர் தோல்வி : 2025ல் வெற்றி கணக்கை துவங்காத பஹத் பாசில் | இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது |
அந்த காலத்தில் புகழ்பெற்ற வசனகர்த்தாக்கள் என்றால், இளங்கோ, கருணாநிதி, கண்ணதாசன் போன்றவர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். இவர்கள் காலத்தில் இவர்களை போன்றே நட்சத்திர வசனகர்த்தாவாக வலம் வந்தவர் கிருஷ்ணசாமி. அதோடு எம்ஜிஆர், சிவாஜிக்கு பிடித்த அவர்களது ஆஸ்தான வசனகர்த்தாவாகவும் இருந்தார், எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒப்பந்தமாகும்போதே இவர் தான் வசனம் எழுத வேண்டும் என்று கூறிவிடுவார்.
வீரபாண்டிய கட்டபொம்மன், குங்குமம், கர்ணன், தங்க சுரங்கம், சொர்க்கம், தர்மம் எங்கே, பொன்னுஞ்சல், என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி உள்ளிட்ட பல சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதினார். பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம், பணம் படைத்தவன், எங்க வீட்டு பிள்ளை, பறக்கும் பாவை உள்ளிட்ட பல எம்ஜிஆர் படங்களுக்கு வசனம் எழுதினார்.
எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' திரைப்படத்திற்கு வசனம் எழுதியதை போல் பின்னாளில் சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்த 'என்னைப்போல் ஒருவன்' திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். வசனங்களுக்காகவே புகழ்பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் படங்களுக்கு வசனம் எழுதியவரும் இவரே.
தஞ்சாவூர் கலியபெருமாள் கிருஷ்ணசாமி, த.க.கிருஷ்ணசாமி என்று சுருக்கமாக அழைக்கப்பட்டார். 1950களில் தொடங்கி நாடங்களுக்கு வசனம் எழுதி பின்னர் திரைப்படங்களுக்கு எழுதினார். சினிமாவுக்கு முன்னதாக சக்தி நாடக சபா என்ற நாடக குழுவை நடத்தி வந்தார். இந்த குழுவின் ஆஸ்தான நடிகராக இருந்தார் சிவாஜி.