விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
நடிகரும் இசையமைப்பாளமான ஜி.வி.பிரகாஷ் குமார் தான் நடித்த பிளாக்மெயில் படம் குறித்து பேசினார். அப்போது அவர் இசையமைப்பாளராக, நடிகராக பல படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை. பல படங்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுத்து உள்ளேன் என்றார். குறிப்பாக, காக்கா முட்டை, சைவம் படங்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படம் நல்ல கதை என்பதால் சம்பளம் வாங்கவில்லை. இயக்குனர் வசந்தபாலன் தன்னை அறிமுகப்படுத்தியதால் அவரின் அநீதி படத்துக்கு சம்பளம் வாங்கவில்லை. அதேபோல் வெற்றிமாறனின் விசாரணை படத்துக்கும் சம்பளம் வாங்கவில்லை என்ற புது தகவலை சொன்னார்.
மேலும் அவர் இசையமைப்பாளராக தனது படங்களின் வியாபாரத்தைப் பொறுத்து சம்பளம் வாங்குகிறேன் என்றார். தான் நடித்த, இசை அமைத்த படங்கள் பைனான்ஸ் பிரச்னையால் தவிக்கும்போது அவற்றின் ரிலீஸுக்காக சம்பளத்தை விட்டுக் கொடுப்பதாக ஜிவி பிரகாஷ் குமார் கூறினார். இப்படி விட்டுக் கொடுத்த சம்பளத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என்ற தகவலும் கூறினார். பிளாக்மெயில் படம் வெளியாகவும் அவர் கணிசமான தொகையை விட்டு கொடுத்து இருப்பதாக தகவல்.