தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகரும் இசையமைப்பாளமான ஜி.வி.பிரகாஷ் குமார் தான் நடித்த பிளாக்மெயில் படம் குறித்து பேசினார். அப்போது அவர் இசையமைப்பாளராக, நடிகராக பல படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை. பல படங்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுத்து உள்ளேன் என்றார். குறிப்பாக, காக்கா முட்டை, சைவம் படங்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படம் நல்ல கதை என்பதால் சம்பளம் வாங்கவில்லை. இயக்குனர் வசந்தபாலன் தன்னை அறிமுகப்படுத்தியதால் அவரின் அநீதி படத்துக்கு சம்பளம் வாங்கவில்லை. அதேபோல் வெற்றிமாறனின் விசாரணை படத்துக்கும் சம்பளம் வாங்கவில்லை என்ற புது தகவலை சொன்னார்.
மேலும் அவர் இசையமைப்பாளராக தனது படங்களின் வியாபாரத்தைப் பொறுத்து சம்பளம் வாங்குகிறேன் என்றார். தான் நடித்த, இசை அமைத்த படங்கள் பைனான்ஸ் பிரச்னையால் தவிக்கும்போது அவற்றின் ரிலீஸுக்காக சம்பளத்தை விட்டுக் கொடுப்பதாக ஜிவி பிரகாஷ் குமார் கூறினார். இப்படி விட்டுக் கொடுத்த சம்பளத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என்ற தகவலும் கூறினார். பிளாக்மெயில் படம் வெளியாகவும் அவர் கணிசமான தொகையை விட்டு கொடுத்து இருப்பதாக தகவல்.