டொவினோ தாமஸ், கயாடு லோகரின் பள்ளிச்சட்டம்பி ரிலீஸ் தேதி அறிவிப்பு | சத்தா பச்சா பட முதல் டிக்கெட்டை வாங்கி ஆன்லைன் விற்பனையை துவங்கி வைத்த மோகன்லால் | ரீல்ஸ் வீடியோ மூலம் மம்முட்டிக்கு ஜோடியான பல்கலைக்கழக பெண் அதிகாரி | பிளாஷ்பேக் : சூசைட் பாயிண்ட்டில் ‛நாயகன்' பட நடிகையின் உயிரை காப்பாற்றிய மோகன்லால் | முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நீண்ட காத்திருப்பு | 100 கோடி கிளப்பில் ‛பராசக்தி' : சிவகார்த்திகேயனுக்கு 5வது படம் | இப்பவும் கதை கேட்கும்போது துாங்குறீங்களா? : அஸ்வின் சொன்ன பதில் | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமண ஏற்படுகள் தீவிரம் | தெலங்கானா : டிக்கெட் கட்டண உயர்வுக்கு 90 நாள் விதி | 'இளையராஜா' பயோபிக் இந்த வருடமாவது ஆரம்பமாகுமா ? |

நடிகரும் இசையமைப்பாளமான ஜி.வி.பிரகாஷ் குமார் தான் நடித்த பிளாக்மெயில் படம் குறித்து பேசினார். அப்போது அவர் இசையமைப்பாளராக, நடிகராக பல படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை. பல படங்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுத்து உள்ளேன் என்றார். குறிப்பாக, காக்கா முட்டை, சைவம் படங்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படம் நல்ல கதை என்பதால் சம்பளம் வாங்கவில்லை. இயக்குனர் வசந்தபாலன் தன்னை அறிமுகப்படுத்தியதால் அவரின் அநீதி படத்துக்கு சம்பளம் வாங்கவில்லை. அதேபோல் வெற்றிமாறனின் விசாரணை படத்துக்கும் சம்பளம் வாங்கவில்லை என்ற புது தகவலை சொன்னார்.
மேலும் அவர் இசையமைப்பாளராக தனது படங்களின் வியாபாரத்தைப் பொறுத்து சம்பளம் வாங்குகிறேன் என்றார். தான் நடித்த, இசை அமைத்த படங்கள் பைனான்ஸ் பிரச்னையால் தவிக்கும்போது அவற்றின் ரிலீஸுக்காக சம்பளத்தை விட்டுக் கொடுப்பதாக ஜிவி பிரகாஷ் குமார் கூறினார். இப்படி விட்டுக் கொடுத்த சம்பளத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என்ற தகவலும் கூறினார். பிளாக்மெயில் படம் வெளியாகவும் அவர் கணிசமான தொகையை விட்டு கொடுத்து இருப்பதாக தகவல்.




