விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். இந்நிலையில் அவரது மகன் ஹர்ஷவர்தன், சிபி சத்யராஜ் நடிக்க இருந்த 20-வது படத்தில் இசையமைப்பாளராக கமிட்டானார் . ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது திடீரென்று ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் ஹர்ஷவர்தன். லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் ஹர்ஷவர்தன் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இந்த படமும் கார்த்தி நடிப்பில் ஏற்கனவே லிங்குசாமி இயக்கிய பையா படத்தை போன்று ரொமான்டிக் ரோடு டிராவல் கதையில் உருவாகிறதாம். தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது.