கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். இந்நிலையில் அவரது மகன் ஹர்ஷவர்தன், சிபி சத்யராஜ் நடிக்க இருந்த 20-வது படத்தில் இசையமைப்பாளராக கமிட்டானார் . ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது திடீரென்று ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் ஹர்ஷவர்தன். லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் ஹர்ஷவர்தன் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இந்த படமும் கார்த்தி நடிப்பில் ஏற்கனவே லிங்குசாமி இயக்கிய பையா படத்தை போன்று ரொமான்டிக் ரோடு டிராவல் கதையில் உருவாகிறதாம். தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது.