இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நாகசைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் பிப்ரவரி 7ம் தேதி வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா ஆகியவற்றில் எந்த புதுப் படம் வெளியானாலும் நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மணி காட்சி ஆகியவை நடப்பது வழக்கம்.
கடந்த வருடம் வெளிவந்த 'புஷ்பா 2' படத்தின் பிரிமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமான படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார். அதன்பின் அங்கு நள்ளிரவு காட்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. சங்கராந்தியின் போது அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் அதற்கும் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இதனால், தெலுங்கானாவில் அதிகாலை காட்சி, டிக்கெட் கட்டண உயர்வு இனிமேல் கிடையாது.
எனவே, ஆந்திர மாநிலத்தில் தங்கள் 'தண்டேல்' படத்திற்கு 50 ரூபாய் கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு தயாரிப்பாளர் விண்ணப்பித்துள்ளார். அரசு தரப்பில் இன்னும் அனுமதி ஆணை வழங்கப்படவில்லை. அதனால், ஆந்திராவில் இப்படத்திற்கான முன்பதிவு இன்னும் ஆரம்பமாகவில்லை. டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதி கிடைத்தாலும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.
டிக்கெட் கட்டண உயர்வு, சிறப்புக் காட்சிகள் இல்லாத காரணத்தால் தெலுங்குப் படங்களுக்கான தெலுங்கானா மாநில வசூல் குறைந்துவிடும்.