ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

1944ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான படம் 'பத்ருஹரி'. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'பத்ருஹரி' என்ற மன்னரின் கதை. நேர்மையாக ஆட்சி செய்த இந்த மன்னன் சமஸ்கிருதத்தில் ஏராளமான பாடல்களை இயற்றியவர். அதே நேரத்தில் பெண்பித்தராகவும் இருந்திருக்கிறார். அவருக்கு 300 மனைவிகள் இருந்தார்கள். அதில் கடைசி மனைவிதான் படத்தின் ஹீரோயின் ஜெயம்மா. மன்னராக செருகளத்தூர் சாமா நடித்திருந்தார். அவரது சகோதரர் விக்ரமாதித்தனாக ஜி.பட்டு அய்யர் நடித்திருந்தார். அவரது மூத்த மருமகன் அஸ்வத்தாமனாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்திருந்தார்.
இவர்கள் தவிர வி.என்.ஜானகி, டி.ஏ.மதுரம், காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், நாகலட்சுமி, கல்யாணி, 'ஆழ்வார்' குப்புசாமி, 'புலிமூட்டை' ராமசாமி, இ.கிருஷ்ணமூர்த்திபா குஞ்சிதா மற்றும் எம்.கிருஷ்ணமூர்த்தி குஞ்சிதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில்தான் முதன் முறையாக ஆண் நடிகர்களும், பெண் நடிகைகளும் மிகவும் நெருக்கமாக தொட்டு பேசி, கட்டிப்பிடித்து நடித்திருந்தார்கள். அதோடு படத்தின் நாயகியாக நடித்த ஜெயம்மா கன்னடத்தில் முன்னணி நடிகை அவர் நல்ல கேரக்டர்களிலேயே நடித்தார். ஆனால் இந்த படத்தில் மன்னரை மயக்கும் விலைமாதுவாக நடித்தார். காமெடி நடிகரான என்.எஸ்.கிருஷ்ணன் இதில் வில்லன். மன்னருக்காக மக்களிடம் கொள்ளை அடிப்பவராக நடித்தார். அதோடு மன்னரின் மனைவி ஜெயம்மாவுடம் கள்ள தொடர்பு வைத்திருப்பவராகவும் நடித்தார்.
நெருக்கமான காட்சிகள், ஜெயம்மா, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த கேரக்டர்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் அதுவே படத்தை வெற்றி பெறவும் வைத்தது.