'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. | ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்து காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? |

1944ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான படம் 'பத்ருஹரி'. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 'பத்ருஹரி' என்ற மன்னரின் கதை. நேர்மையாக ஆட்சி செய்த இந்த மன்னன் சமஸ்கிருதத்தில் ஏராளமான பாடல்களை இயற்றியவர். அதே நேரத்தில் பெண்பித்தராகவும் இருந்திருக்கிறார். அவருக்கு 300 மனைவிகள் இருந்தார்கள். அதில் கடைசி மனைவிதான் படத்தின் ஹீரோயின் ஜெயம்மா. மன்னராக செருகளத்தூர் சாமா நடித்திருந்தார். அவரது சகோதரர் விக்ரமாதித்தனாக ஜி.பட்டு அய்யர் நடித்திருந்தார். அவரது மூத்த மருமகன் அஸ்வத்தாமனாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்திருந்தார்.
இவர்கள் தவிர வி.என்.ஜானகி, டி.ஏ.மதுரம், காளி என்.ரத்னம், சி.டி.ராஜகாந்தம், நாகலட்சுமி, கல்யாணி, 'ஆழ்வார்' குப்புசாமி, 'புலிமூட்டை' ராமசாமி, இ.கிருஷ்ணமூர்த்திபா குஞ்சிதா மற்றும் எம்.கிருஷ்ணமூர்த்தி குஞ்சிதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில்தான் முதன் முறையாக ஆண் நடிகர்களும், பெண் நடிகைகளும் மிகவும் நெருக்கமாக தொட்டு பேசி, கட்டிப்பிடித்து நடித்திருந்தார்கள். அதோடு படத்தின் நாயகியாக நடித்த ஜெயம்மா கன்னடத்தில் முன்னணி நடிகை அவர் நல்ல கேரக்டர்களிலேயே நடித்தார். ஆனால் இந்த படத்தில் மன்னரை மயக்கும் விலைமாதுவாக நடித்தார். காமெடி நடிகரான என்.எஸ்.கிருஷ்ணன் இதில் வில்லன். மன்னருக்காக மக்களிடம் கொள்ளை அடிப்பவராக நடித்தார். அதோடு மன்னரின் மனைவி ஜெயம்மாவுடம் கள்ள தொடர்பு வைத்திருப்பவராகவும் நடித்தார்.
நெருக்கமான காட்சிகள், ஜெயம்மா, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த கேரக்டர்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால் அதுவே படத்தை வெற்றி பெறவும் வைத்தது.